கோவையில் பொள்ளாச்சி அருகிலுள்ள கோட்டூரில் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் பொள்ளாச்சி அருகிலுள்ள கோட்டூரில் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைகாரன்புதூரை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னசாமி, ஈஸ்வரி தம்பதியரின் மகன் உதயகுமார்(18). இவர் கோட்டூரில் உள்ள தாத்தா முத்துசாமி வீட்டில் தங்கி கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவன் உதயகுமார் வேதியியல் பாடப்பிரிவில் மட்டும் தேர்ச்சி பெற்று மற்ற பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால், தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று பிற்பகல் கோட்டூரில் உள்ள தனது தாத்தா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த கோட்டூர் காவல் நிலைய போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைகாரன்புதூரை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னசாமி, ஈஸ்வரி தம்பதியரின் மகன் உதயகுமார்(18). இவர் கோட்டூரில் உள்ள தாத்தா முத்துசாமி வீட்டில் தங்கி கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவன் உதயகுமார் வேதியியல் பாடப்பிரிவில் மட்டும் தேர்ச்சி பெற்று மற்ற பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால், தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று பிற்பகல் கோட்டூரில் உள்ள தனது தாத்தா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த கோட்டூர் காவல் நிலைய போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.