தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாடு நிறைவு பேரணியில், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியவாறு பேரணிச் சென்றனர்.
கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாடு நிறைவு பேரணியில், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியவாறு பேரணிச் சென்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 15 வது மாநில மாநாடு கோவையில் கடந்த 19 ஆம் தேதி துவங்கியது.

சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற மாநாட்டின் நிறைவாக கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தாகாலணி வரை சுமார் 500க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேரணியாகச் சென்றனர். முன்னதாக ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த ஊழியர்கள் தனி தனியாக போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

அதில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் காதில் பூ வைத்து, நெத்தியில் நாமம் சாத்தியவாறு தரமான பேருந்து வழங்க வேண்டும், தூய்மையான கழிவறை வேண்டும், போக்குவரத்து ஊழியர்களின் நீண்ட ஆண்டு கோரிக்கைகளை செவி சாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாட்டுப்பாடியும், கைகளை தட்டியும் ஆரவாரம் செய்தவாறு பேரணிச் சென்றனர்.

இதையடுத்து சிவானந்தாகாலணி பகுதியில் பொதுக்கூட்டத்துடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 15 வது மாநில மாநாடு நிறைவடைகிறது.

தொழிற்சங்கத்தினர் பேரணியையொட்டி, வழி நெடுக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 15 வது மாநில மாநாடு கோவையில் கடந்த 19 ஆம் தேதி துவங்கியது.
சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற மாநாட்டின் நிறைவாக கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தாகாலணி வரை சுமார் 500க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேரணியாகச் சென்றனர். முன்னதாக ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த ஊழியர்கள் தனி தனியாக போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
அதில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் காதில் பூ வைத்து, நெத்தியில் நாமம் சாத்தியவாறு தரமான பேருந்து வழங்க வேண்டும், தூய்மையான கழிவறை வேண்டும், போக்குவரத்து ஊழியர்களின் நீண்ட ஆண்டு கோரிக்கைகளை செவி சாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாட்டுப்பாடியும், கைகளை தட்டியும் ஆரவாரம் செய்தவாறு பேரணிச் சென்றனர்.
இதையடுத்து சிவானந்தாகாலணி பகுதியில் பொதுக்கூட்டத்துடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 15 வது மாநில மாநாடு நிறைவடைகிறது.
தொழிற்சங்கத்தினர் பேரணியையொட்டி, வழி நெடுக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.