தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாடு நிறைவு பேரணி - 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாடு நிறைவு பேரணியில், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியவாறு பேரணிச் சென்றனர்.


கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாடு நிறைவு பேரணியில், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியவாறு பேரணிச் சென்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 15 வது மாநில மாநாடு கோவையில் கடந்த 19 ஆம் தேதி துவங்கியது.



சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற மாநாட்டின் நிறைவாக கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தாகாலணி வரை சுமார் 500க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேரணியாகச் சென்றனர். முன்னதாக ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த ஊழியர்கள் தனி தனியாக போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.



அதில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் காதில் பூ வைத்து, நெத்தியில் நாமம் சாத்தியவாறு தரமான பேருந்து வழங்க வேண்டும், தூய்மையான கழிவறை வேண்டும், போக்குவரத்து ஊழியர்களின் நீண்ட ஆண்டு கோரிக்கைகளை செவி சாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாட்டுப்பாடியும், கைகளை தட்டியும் ஆரவாரம் செய்தவாறு பேரணிச் சென்றனர்.



இதையடுத்து சிவானந்தாகாலணி பகுதியில் பொதுக்கூட்டத்துடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 15 வது மாநில மாநாடு நிறைவடைகிறது.



தொழிற்சங்கத்தினர் பேரணியையொட்டி, வழி நெடுக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...