ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் 27-ம் தேதி ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு நடத்த விவசாயிகள் மற்றும் வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
கோவை: ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் வருகிற 27-ந் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக பாலாறு படுகை விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.
கோவை மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாகவும் பொள்ளாச்சி, ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சுமார் 50-ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்காகவும், ஆழியாறு அணையிலிருந்து, ரூபாய் 930-கோடி செலவில் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இத்திட்டத்திற்கு, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று ஆழியாறு படுகை விவசாயிகள் மற்றும் பொள்ளாச்சியில் உள்ள வணிகர்கள் பல்வேறு கூட்டமைப்பினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆழியாறு அணையில் இருந்து தண்ணீரைக் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும்,அரசு செவி சாய்க்காததால் வரும் 27-ஆம் தேதி விவசாயிகள், வணிகர்கள் மற்றும் பல்வேறு கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ.250-கோடி செலவில்காவேரி ஆறு, உள்ளிட்ட 4-திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 150-கிலோமீட்டர் தொலைவில் உள்ளஆழியாறு அணையில் இருந்து தண்ணீரை ஒட்டன்சத்திரம் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

ஆழியாறு அணையை நம்பியுள்ள பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆண்டுதோறும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விலை நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவே, தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
கோவை மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாகவும் பொள்ளாச்சி, ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சுமார் 50-ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்காகவும், ஆழியாறு அணையிலிருந்து, ரூபாய் 930-கோடி செலவில் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இத்திட்டத்திற்கு, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று ஆழியாறு படுகை விவசாயிகள் மற்றும் பொள்ளாச்சியில் உள்ள வணிகர்கள் பல்வேறு கூட்டமைப்பினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆழியாறு அணையில் இருந்து தண்ணீரைக் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும்,அரசு செவி சாய்க்காததால் வரும் 27-ஆம் தேதி விவசாயிகள், வணிகர்கள் மற்றும் பல்வேறு கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ.250-கோடி செலவில்காவேரி ஆறு, உள்ளிட்ட 4-திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 150-கிலோமீட்டர் தொலைவில் உள்ளஆழியாறு அணையில் இருந்து தண்ணீரை ஒட்டன்சத்திரம் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
ஆழியாறு அணையை நம்பியுள்ள பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆண்டுதோறும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விலை நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவே, தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.