கோவையில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்... இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "மனிதநேயத்திற்கான யோகா"..!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் சார்பில் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டு "மனிதநேயத்திற்கான யோகா" என்ற கருப்பொருளின் அடிப்படையில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது.


கோவை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் சார்பில் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.



சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாட்டில் பல்வேறு இடங்களில் அரசு சார்பிலும் தனியார் சார்பிலும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் யோகா பயிற்சிகள் கற்றுத் தரப்படும். மேலும், யோகா செய்வதன் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில், இன்று பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உள்பட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு காவலர்கள் கலந்து கொண்டு யோகாசன பயிற்சி மேற்கொண்டனர்.



கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவமனை முதல்வர் நிர்மலா முன்னிலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் செவிலிய மாணவர்கள் யோகாசனப் பயிற்சியை மேற்கொண்டனர். நேரு விளையாட்டு மைதானத்தில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசனப் பயிற்சியை மேற்கொண்டனர்.

மேலும், கோவை சூலூர் பகுதியில் உள்ள விமானப்படைத்தளத்தில் விமானப் படையைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு யோகாசன பயிற்சி மேற்கொண்டனர். அவர்களுக்கு ஈஷா யோகா மையத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர்.



அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் தனியார் மருத்துவமனை, தனியார் பள்ளி கல்லூரிகள், தனியார் அமைப்புகள் தனியார் நிறுவனங்கள் சார்பிலும் யோகா தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

"மனிதநேயத்திற்கான யோகா" என்று கருப்பொருளின் அடிப்படையில் இந்த ஆண்டு யோகா தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...