கோவை பொள்ளாச்சியில் கின்னஸ் சாதனைக்காக தண்ணீரில் மிதந்து யோகா பயிற்சி மேற்கொள்ளும் இளம்பெண்..!

அனைத்து மக்களுக்கும் யோகாவின் பயன் சென்றடைய வேண்டும் என்பதற்காக இரண்டு மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா ஆசனங்கள் செய்து வருவதாகவும், விரைவில் கின்னஸ் சாதனைக்காக 24-மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா செய்ய பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.


கோவை: கோவை பொள்ளாச்சியில் கின்னஸ் சாதனைக்காக தண்ணீரில் மிதந்து யோகா பயிற்சி மேற்கொள்ளும் இளம்பெண்ணுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.



பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி கோபால் நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார் இவரது மனைவி கீதா இவர்களுக்கு இரண்டு வயதில் சாய் பிரணவ் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் கீதா சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில் யோகா பயிற்சி மேற்கொள்வதால் உடல், மனம் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக பெண்கள் பிரசவத்திற்கு பிறகு யோகா பயிற்சி செய்வதன் மூலம் புத்துணர்ச்சியாக இருக்க முடியும்.

எனவே, அனைவரும் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், இரண்டு மணி நேரம் தண்ணீரில் மிதந்தவாறு பல்வேறு விதமான யோகா ஆசனங்களை செய்து அசத்தி வருகிறார்.



கடந்த 8-ஆண்டுகளாக யோகா பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், தண்ணீரில் யோகா பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக இருக்கும், உடல் வலி இருக்காது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் மனம் ஒரு நிலை படுத்தி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

எனவே,அனைத்து மக்களுக்கும் யோகாவின் பயன் சென்றடைய வேண்டும் என்பதற்காக இரண்டு மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா ஆசனங்கள் செய்து வருவதாகவும்,விரைவில் கின்னஸ் சாதனைக்காக 24-மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா செய்ய பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் கீதா தெரிவித்தார்.

இளம்பெண் கீதாவின் இந்த முயற்சியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...