அனைத்து மக்களுக்கும் யோகாவின் பயன் சென்றடைய வேண்டும் என்பதற்காக இரண்டு மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா ஆசனங்கள் செய்து வருவதாகவும், விரைவில் கின்னஸ் சாதனைக்காக 24-மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா செய்ய பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கோவை: கோவை பொள்ளாச்சியில் கின்னஸ் சாதனைக்காக தண்ணீரில் மிதந்து யோகா பயிற்சி மேற்கொள்ளும் இளம்பெண்ணுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி கோபால் நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார் இவரது மனைவி கீதா இவர்களுக்கு இரண்டு வயதில் சாய் பிரணவ் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் கீதா சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில் யோகா பயிற்சி மேற்கொள்வதால் உடல், மனம் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக பெண்கள் பிரசவத்திற்கு பிறகு யோகா பயிற்சி செய்வதன் மூலம் புத்துணர்ச்சியாக இருக்க முடியும்.
எனவே, அனைவரும் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், இரண்டு மணி நேரம் தண்ணீரில் மிதந்தவாறு பல்வேறு விதமான யோகா ஆசனங்களை செய்து அசத்தி வருகிறார்.

கடந்த 8-ஆண்டுகளாக யோகா பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், தண்ணீரில் யோகா பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக இருக்கும், உடல் வலி இருக்காது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் மனம் ஒரு நிலை படுத்தி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
எனவே,அனைத்து மக்களுக்கும் யோகாவின் பயன் சென்றடைய வேண்டும் என்பதற்காக இரண்டு மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா ஆசனங்கள் செய்து வருவதாகவும்,விரைவில் கின்னஸ் சாதனைக்காக 24-மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா செய்ய பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் கீதா தெரிவித்தார்.
இளம்பெண் கீதாவின் இந்த முயற்சியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி கோபால் நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார் இவரது மனைவி கீதா இவர்களுக்கு இரண்டு வயதில் சாய் பிரணவ் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் கீதா சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில் யோகா பயிற்சி மேற்கொள்வதால் உடல், மனம் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக பெண்கள் பிரசவத்திற்கு பிறகு யோகா பயிற்சி செய்வதன் மூலம் புத்துணர்ச்சியாக இருக்க முடியும்.
எனவே, அனைவரும் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், இரண்டு மணி நேரம் தண்ணீரில் மிதந்தவாறு பல்வேறு விதமான யோகா ஆசனங்களை செய்து அசத்தி வருகிறார்.
கடந்த 8-ஆண்டுகளாக யோகா பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், தண்ணீரில் யோகா பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக இருக்கும், உடல் வலி இருக்காது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் மனம் ஒரு நிலை படுத்தி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
எனவே,அனைத்து மக்களுக்கும் யோகாவின் பயன் சென்றடைய வேண்டும் என்பதற்காக இரண்டு மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா ஆசனங்கள் செய்து வருவதாகவும்,விரைவில் கின்னஸ் சாதனைக்காக 24-மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா செய்ய பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் கீதா தெரிவித்தார்.
இளம்பெண் கீதாவின் இந்த முயற்சியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.