சர்வதேச யோகா தினம்: அரசியலில் இருப்பதால் மன அழுத்தம் கூடுதலாக இருக்கும். அதை சரி செய்ய யோகா உதவியாக உள்ளது - வானதி சீனிவாசன்

கோவையில் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா தினத்தில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு யோகாசனப் பயிற்சிகளை மேற்கொண்டார்.



கோவை: இன்று ஜூன் 21, உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாட்டில் பல்வேறு இடங்களில் அரசு சார்பிலும் தனியார் சார்பிலும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் யோகா பயிற்சிகள் கற்பிப்பு மற்றும் யோகா செய்வதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.



கோவையில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் சார்பில் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக, பீளமேடு பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்ற யோகா தினத்தில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு யோகாசனப் பயிற்சியை மேற்கொண்டார்.



இந்நிகழ்வில் பேசிய அவர், யோகா பயிற்சி மிகப்பெரிய கலை.நோய்தொற்று காலத்தில் யோகா பயிற்சி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. யோகா பயிற்சியினால் மன அமைதியுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க முடியும்.

மேலும் நாங்கள் அரசியலில் இருப்பதால் எங்களுக்கு ஸ்ட்ரெஸ் கூடுதலாக இருக்கும். எனவே, நாங்களும் யோகா பயிற்சி எடுத்து வருகிறோம். மேலும், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மத்திய அமைச்சர்கள் இந்த யோகா பயிற்சியை செய்து வருகிறார்கள், என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கல்லூரியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...