கோவையில் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா தினத்தில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு யோகாசனப் பயிற்சிகளை மேற்கொண்டார்.
கோவை: இன்று ஜூன் 21, உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாட்டில் பல்வேறு இடங்களில் அரசு சார்பிலும் தனியார் சார்பிலும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் யோகா பயிற்சிகள் கற்பிப்பு மற்றும் யோகா செய்வதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
கோவையில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் சார்பில் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, பீளமேடு பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்ற யோகா தினத்தில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு யோகாசனப் பயிற்சியை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் பேசிய அவர், யோகா பயிற்சி மிகப்பெரிய கலை.நோய்தொற்று காலத்தில் யோகா பயிற்சி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. யோகா பயிற்சியினால் மன அமைதியுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க முடியும்.
மேலும் நாங்கள் அரசியலில் இருப்பதால் எங்களுக்கு ஸ்ட்ரெஸ் கூடுதலாக இருக்கும். எனவே, நாங்களும் யோகா பயிற்சி எடுத்து வருகிறோம். மேலும், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மத்திய அமைச்சர்கள் இந்த யோகா பயிற்சியை செய்து வருகிறார்கள், என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கல்லூரியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.