வனத்துறையினர் முறையாக கண்காணித்து காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை, எனக் கூறி வனத்துறையை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கடந்த 10 நாட்களாக, தொண்டாமுத்தூர், நரசீபுரம், தேவராயபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் காட்டு யானை கூட்டம் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
அறுவடைக்கு தயாராக இருக்கும் தக்காளி போன்ற காய்கறிகள்மற்றும் நடவுக்கு வைத்திருந்த வெங்காயம், வாழை, தென்னை ஆகிய பயிர்களையும் நாசம் செய்வதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வனத்துறையினர் முறையாக கண்காணித்து காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை,எனக் கூறி வனத்துறையை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அங்கு வந்த அரசு பேருந்தையும் சிறை பிடித்துள்ளதால், விவசாயிகளுடன், போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.