கோவை மத்திய சிறையில் 12-மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள் 100-சதவீதம் தேர்ச்சி..!

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 20-கைதிகளும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 33-கைதிகளும் தேர்வு எழுதிய நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை மத்திய சிறையில் இருந்து தேர்வு எழுதிய சிறை கைதிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை மத்திய சிறையில் இருந்து 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 20-கைதிகளும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 33-கைதிகளும் எழுதினர். இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்து எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை மாநகர், பொள்ளாச்சி, எஸ் எஸ் குளம், பேரூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளது. இந்த கல்வி மாவட்டங்களில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு 524 பள்ளிகளைச் சேர்ந்த 19 ஆயிரத்து 827 மாணவர்கள் 19 ஆயிரத்து 804 மாணவிகள் என மொத்தம் 39 ஆயிரத்து 636 பேர் எழுதினர்.

இதில், 17 ஆயிரத்து 584 மாணவர்களும் 19 ஆயிரத்து 27 மாணவிகளும் என மொத்தம் 36 ஆயிரத்து 661 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.69 மாணவிகள் தேர்ச்சி வீதம் 92.38 மொத்தமாக மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 92.38. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் கோவை மாவட்டம் 14-வது இடத்தில் இருந்தது இந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவில் கோவை மாவட்டம் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...