12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 20-கைதிகளும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 33-கைதிகளும் தேர்வு எழுதிய நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை: கோவை மத்திய சிறையில் இருந்து தேர்வு எழுதிய சிறை கைதிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மத்திய சிறையில் இருந்து 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 20-கைதிகளும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 33-கைதிகளும் எழுதினர். இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்து எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மாநகர், பொள்ளாச்சி, எஸ் எஸ் குளம், பேரூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளது. இந்த கல்வி மாவட்டங்களில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு 524 பள்ளிகளைச் சேர்ந்த 19 ஆயிரத்து 827 மாணவர்கள் 19 ஆயிரத்து 804 மாணவிகள் என மொத்தம் 39 ஆயிரத்து 636 பேர் எழுதினர்.
இதில், 17 ஆயிரத்து 584 மாணவர்களும் 19 ஆயிரத்து 27 மாணவிகளும் என மொத்தம் 36 ஆயிரத்து 661 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.69 மாணவிகள் தேர்ச்சி வீதம் 92.38 மொத்தமாக மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 92.38. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் கோவை மாவட்டம் 14-வது இடத்தில் இருந்தது இந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவில் கோவை மாவட்டம் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை மத்திய சிறையில் இருந்து 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 20-கைதிகளும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 33-கைதிகளும் எழுதினர். இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்து எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மாநகர், பொள்ளாச்சி, எஸ் எஸ் குளம், பேரூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளது. இந்த கல்வி மாவட்டங்களில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு 524 பள்ளிகளைச் சேர்ந்த 19 ஆயிரத்து 827 மாணவர்கள் 19 ஆயிரத்து 804 மாணவிகள் என மொத்தம் 39 ஆயிரத்து 636 பேர் எழுதினர்.
இதில், 17 ஆயிரத்து 584 மாணவர்களும் 19 ஆயிரத்து 27 மாணவிகளும் என மொத்தம் 36 ஆயிரத்து 661 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.69 மாணவிகள் தேர்ச்சி வீதம் 92.38 மொத்தமாக மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 92.38. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் கோவை மாவட்டம் 14-வது இடத்தில் இருந்தது இந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவில் கோவை மாவட்டம் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.