கோவை மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் - 98.78 % அதில் பார்வை மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி - 100 %, வாய் மற்றும் காது மாற்றுத்திறனாளிகள் - 81.48 %, உடல் உறுப்பு மாற்றுத்திறனாளிகள் - 100 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவை: கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய33,737 மாணவ-மாணவிகளில் 32,695 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 5-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடந்தது. கோவை மாவட்டத்தில், 119 தேர்வு மையங்களில், பிளஸ்-2 பொதுத்தேர்வை 35,033 மாணவ-மாணவிகள் எழுதினர். இது தவிர 2,047 தனித்தேர்வர்களும் இந்த தேர்வை எழுதினர்.
இதையடுத்து, பிளஸ்-2 தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதையடுத்து, பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1-ந் தேதி தொடங்கியது. இந்த பணிகளுக்காக, கோவையில் 3 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு மையங்களிலும் விடைத்தாள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதன்மை கண்காணிப்பாளர்கள், உதவி மதிப்பீட்டாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். விடைத்தாள் திருத்தப்பட்ட நிலையில் இன்று தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
இதில், கோவை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் - 96.91%, அதில் மாணவர்கள் - 95.58 %, மாணவிகள் - 98.05 %. மொத்தம் தேர்வு எழுதிய 33,737 பேரில் 32,695 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், கோவை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் - 98.78 % அதில் பார்வை மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி - 100 %, வாய் மற்றும் காது மாற்றுத்திறனாளிகள் - 81.48 %, உடல் உறுப்பு மாற்றுத்திறனாளிகள் - 100 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 5-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடந்தது. கோவை மாவட்டத்தில், 119 தேர்வு மையங்களில், பிளஸ்-2 பொதுத்தேர்வை 35,033 மாணவ-மாணவிகள் எழுதினர். இது தவிர 2,047 தனித்தேர்வர்களும் இந்த தேர்வை எழுதினர்.
இதையடுத்து, பிளஸ்-2 தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதையடுத்து, பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1-ந் தேதி தொடங்கியது. இந்த பணிகளுக்காக, கோவையில் 3 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு மையங்களிலும் விடைத்தாள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதன்மை கண்காணிப்பாளர்கள், உதவி மதிப்பீட்டாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். விடைத்தாள் திருத்தப்பட்ட நிலையில் இன்று தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
இதில், கோவை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் - 96.91%, அதில் மாணவர்கள் - 95.58 %, மாணவிகள் - 98.05 %. மொத்தம் தேர்வு எழுதிய 33,737 பேரில் 32,695 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், கோவை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் - 98.78 % அதில் பார்வை மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி - 100 %, வாய் மற்றும் காது மாற்றுத்திறனாளிகள் - 81.48 %, உடல் உறுப்பு மாற்றுத்திறனாளிகள் - 100 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.