உள்ளூர் Taxi vs RedTaxi - ஊட்டியில் தொடரும் சச்சரவு: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநர்கள் மனு..!

கோவையில் இயங்கும் தனியார் டாக்ஸியை (Red Taxi) ஊட்டியில் இயங்க உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள் விடுவதில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை: கோவையில் இயங்கும் தனியார் டாக்ஸியை ஊட்டியில் இயங்க ஊட்டி டாக்ஸி ஓட்டுநர்கள் விடுவதில்லை எனவும், மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.



கோவை மாவட்ட தனியார் டாக்ஸி (Red Taxi) ஓட்டுநர் தங்களது வாகனங்கள் ஊட்டி செல்லும் போது அங்குள்ள உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள் விடுவதில்லை எனவும், தங்களது வாகனங்களை சேதப்படுத்துவதாகவும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இது குறித்து அவர்கள் கூறுகையில், கோவைக்கு வரும் பல்வேறு மாவட்டமற்றும் மாநிலங்களை சார்ந்த பொதுமக்கள் கோவையிலிருந்தே முழு சுற்றுக்கும் பதிவு செய்து விடுவர் என்றும், அவ்வாறு இருக்கும்போது பயணிகளை பாதியில் இறக்கி விட முடியாது என தெரிவித்தனர்.

மேலும், ஊட்டியில் உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள் கோவையிலிருந்து செல்லும் போது, பரளியாறு அருகிலேயே தங்களைத் தடுத்து விடுவதாகவும், இழிவாக பேசுவதாகவும் சிலர் தாக்குதல் முயற்சியில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.



Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...