கோவை ஈச்சனாரி அருகே ஆம்னி பேருந்து - டைல்ஸ் லோடு ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 4-பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை:கோவை ஈச்சனாரி அருகே ஆம்னி பேருந்து - டைல்ஸ் லோடு ஏற்றி வந்த லாரி மோதிய விபத்து குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக கோவை வந்த ஆம்னி பேருந்து கோவை ஈச்சனாரி சந்திப்பு அருகே வந்த போது, சேலத்தில் இருந்து கேரளா நோக்கி டைல்ஸ் லோடு ஏற்றிச் சென்ற லாரி, ஆம்னி பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்து பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து, சாலையில் சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் 4 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து மதுக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக கோவை வந்த ஆம்னி பேருந்து கோவை ஈச்சனாரி சந்திப்பு அருகே வந்த போது, சேலத்தில் இருந்து கேரளா நோக்கி டைல்ஸ் லோடு ஏற்றிச் சென்ற லாரி, ஆம்னி பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்து பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து, சாலையில் சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் 4 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து மதுக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.