மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.69-க்குட்பட்ட பகுதிகளில் கோவை மாநகராட்சி ஆணையாளர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு..!

மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.69-க்குட்பட்ட பாரதி பூங்கா பகுதியில்‌ மக்கும்‌ கழிவுகள்‌ கொண்டு நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தை (Micro Composting Center) முழு பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, அறிவுறுத்தினார்.



கோவை: மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.69-க்குட்பட்ட பகுதிகளில் கோவை மாநகராட்சி ஆணையாளர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.69-க்குட்பட்ட சிந்தாமணி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ வருகைப்பதிவேடுகள்‌ மற்றும்‌ தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, தூய்மைப்பணியாளர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார்‌.



பின்னர், மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.69-க்குட்பட்ட கிகானி சுரங்கபாதை பகுதியில்‌ மழைநீர்‌ தேங்குவதை உடனடியாக வெளியேற்றுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



மேலும், மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.69-க்குட்பட்ட பாரதி பூங்கா பகுதியில்‌ மக்கும்‌ கழிவுகள்‌ கொண்டு நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தை (Micro Composting Center) முழு பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, அறிவுறுத்தினார்.



இதனிடையே,‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.69-க்குட்பட்ட பாரதி பூங்காவில்‌ உள்ள குடிநீர்‌ மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டியை பார்வையிட்டு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, நேரில்‌ ஆய்வு செய்தார்‌.



மேலும், மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.69-க்குட்பட்ட பாரதி பூங்கா, ஜவகர்‌ நகரில்‌ ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, அப்பகுதியில்‌ மரக்கழிவுகளால்‌ ஏற்படும்‌ குப்பைகளை உடனடியாக அகற்ற தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



பின்னர்,‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.69க்குட்பட்ட பாரதி பூங்காவை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, பூங்கா பராமரித்தல்‌, பூங்காவில்‌ குடிநீர்‌ மற்றும்‌ கழிவறை வசதி குறித்து பொதுமக்களிடம்‌ கேட்டறிந்தார்‌.



மத்திய மண்டலம்‌ வ.உ.சி. பூங்காவை புனரமைத்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



உடன்‌ மத்திய மண்டல உதவி ஆணையர்‌ சங்கர்‌, உதவி நகரமைப்பு அலுவலர்‌ பாபு, உதவி பொறியாளர்‌ கணேசன்‌, உதவி செயற்பொறியாளர்‌ புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்‌ சரவணக்குமார்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ இராமச்சந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...