கோவையில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் நீரில் மூழ்கி பலி - மோட்டாரை சரி செய்ய முயன்ற போது ஏற்பட்ட விபரீதம்..!

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கோவை:கோவையில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கோவை வெள்ளலூர் இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (81) இவர் நேற்று முன் தினம்தங்களது தோட்டத்து கிணற்றில் பழுதடைந்த மோட்டாரை தனது மகன் குமாரவேல் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து டிராக்டர் உதவியோடு மேலே இழுத்துக் கொண்டு இருந்ததாக தெரிகிறது.

அப்போது திடீரென மோட்டர் கட்டப்பட்ட கயிறு அறுந்ததால் அருகே நின்ற கருப்புசாமி நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் கிணற்றில் இறங்கி உள்ளே இருந்த கருப்பசாமியை மேலே எடுத்து வந்தனர். அவரை சோதனை செய்த போது அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததுதெரியவந்தது.

இதையடுத்து, போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கருப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...