கோவை கொடிசியா வளாகத்தில் முன்னோடி வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கும் விழா..!

இவ்விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி 44.17 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி கடன்களை மாணவ-மாணவியர்களுக்கு வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஜிஎஸ் சமீரன், மாநகராட்சி ஆணையர் மற்றும் முன்னோடி வங்கி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் முன்னோடி வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியர் ஜிஎஸ் சமீரன் மாநகராட்சி ஆணையர் மற்றும் முன்னோடி வங்கி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி 44.17 கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக் கடன்களை மாணவ-மாணவியர்களுக்கு வழங்கினார்.



விழா மேடையில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜிஎஸ்.சமீரன் வங்கிகள் நினைத்தால் ஒரு இரவில் கூட கடனுதவியை தயார் செய்ய முடியும் அந்த நினைப்புடன் கண்டிப்பாக முனைப்போடு செயல்பட வேண்டும். ஒரு சில டெக்னிகல் பிரச்சினைகள் இருப்பதால் சிபில் ஸ்கோர் போன்ற காரணங்களால் வங்கிகள் மாணவர்களுக்கு கடன்கள் வழங்காமல் இருப்பதாக தெரிகிறது.

அவருடைய தந்தையும் அல்லது பெற்றோர்களோ வேறு ஏதேனும் கடன் பெற்று அதன் பாதிப்பு காரணமாகவும், அவர்களுடைய கடன் இருப்பு காரணமாகவும் அவர்களுடைய மகன்களுக்கும் அல்லது மகளுக்கோ கல்விக்கடன் பாதிக்கப்படுகிறது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அப்பா பெற்ற கடனுக்காக கல்வி என்ற தகுதியை தான் மகனோ அல்லது மகளோ அடமானமாக வைக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கோவை மாவட்டத்தில் எத்தனை கல்வி நிறுவனங்கள் உள்ளன நம் மாவட்டத்தில் 350 கோடி கட்டாயமாக கல்வி கடன் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை உங்களிடம் நான் வைத்துக் கொள்கிறேன். அதற்கு உறுதுணையாக அனைத்து வங்கிகளும் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனை நான் மனமார பாராட்டுகிறேன்.

இந்த நிதியாண்டில் கண்டிப்பாக தமிழகத்திலேயே அதிக கல்விக் கடன் கொடுத்த மாவட்டமாக வர வேண்டும் அதற்கு முன்னோடியாக இன்றைய தினம் 44.17 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். இன்னொரு பெரிய மேடையில் 100 கோடி கடன் கொடுப்பதற்கான திட்டம் தயார் செய்துள்ளோம். அமைச்சர் ஆலோசனைப்படி 350 கோடி கொடுக்க வேண்டும் 100 கோடி அளவிற்கு நீங்கள் தருவதற்கு தயாராக உள்ளீர்கள் என்ற ஒப்புதலை கொடுத்துள்ளோம்.



எனவே, அனைத்து வங்கி மேலாளர்கள் என்னுடைய மானத்தை காப்பாற்ற வேண்டும் நீங்கள் துணிந்து இறங்கினால் கண்டிப்பாக வேலை செய்ய முடியும். நீங்கள் முனைப்போடு செயல்படும் பட்சத்தில் நம்முடைய மாவட்டத்திற்கான இலக்கை அடைய முடியும் நான் சொன்னது போல் 100 கோடி கடன் ஒரு பெரிய மேடையின் கொடுக்க தயாராக இருந்தாள் முதல்வர் அவர்கள் தலைமையில் கூட கொடுக்க வாய்ப்பு உள்ளது.

எனவே அனைவரும் முனைப்போடு செயல்பட வேண்டும் இது மாணவ மாணவியரின் எதிர்காலம் வாழ்க்கைக்கு ஒரு மிகப்பெரிய உதவியாக இருக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இது எவ்வளவு பெரிய உதவிகரமாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும் ஒரு வாகனத்தின் ஸ்டார்டர் போலத்தான் நாம் கொடுக்க கூடிய இந்த கடன் அவர்கள் பெட்ரோல் போட முடியும். அந்த வாகனத்தை இயக்க முடியும் ஆனால், அதை ஸ்டார்ட் செய்வதற்கு தேவையான ஸ்டார்டர் போலத்தான் இந்த கல்விக்கடன் தயவுசெய்து உணர்வோடு முனைப்போடு வங்கிகள் செயலாற்ற வேண்டும். அதற்காக அனைத்து வங்கிகளும் முனைப்போடு செயல்பட வேண்டும் நானும் கல்விக் கடன் பெற்றுத்தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...