இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக நகர்புற நலவாழ்வு மையம் இருந்து வரும் நிலையில், தற்போது இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள், சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை: நஞ்சுண்டாபுரத்தில் நகர்புற நலவாழ்வு மையம் கட்டும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
கோவை மாநகர் நஞ்சுண்டாபுரம் காந்தி நகர் பகுதியில், நகர்புற நலவாழ்வு மையம் அமைக்கும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
25-லட்சம் மதிப்பில் இந்த நகர்புற நல வாழ்வு மையம் கட்டப்பட உள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக நகர்புற நலவாழ்வு மையம் இருந்து வரும் நிலையில், தற்போது இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கூடிய விரைவில் மையத்தினை கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள், சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் கல்பனா ஆனந்த் குமார், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு ஆகியோர் உடனிருந்தனர்.
கோவை மாநகர் நஞ்சுண்டாபுரம் காந்தி நகர் பகுதியில், நகர்புற நலவாழ்வு மையம் அமைக்கும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
25-லட்சம் மதிப்பில் இந்த நகர்புற நல வாழ்வு மையம் கட்டப்பட உள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக நகர்புற நலவாழ்வு மையம் இருந்து வரும் நிலையில், தற்போது இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கூடிய விரைவில் மையத்தினை கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள், சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் கல்பனா ஆனந்த் குமார், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு ஆகியோர் உடனிருந்தனர்.