விபத்து வழக்கு: கோவை அரசு பேருந்து ஓட்டுநருக்கு 6-மாதம் சிறை தண்டனை..!

வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநருக்கு 6-மாதம் சிறைத் தண்டனை மற்றும் 2,000-ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை அரசு பேருந்து ஓட்டுநருக்கு 6-மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை அருகே உள்ள அப்பாச்சி கவுண்டன் பதியை சேர்ந்தவர் நஞ்சன் மகன் காளிமுத்து (28). இவரது மனைவிக்கு கடந்த செப்டம்பர் 12, 2017, கோவை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த குழந்தையை பார்க்க தனது உறவினர்களுடன் கோவை அரசு மருத்துவமனை வந்துவிட்டு, மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக அங்கிருந்து சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது உக்கடத்தில் இருந்து சுல்தான்பேட்டை செல்லும் அரசு பேருந்து (எண் s27) பேருந்து மோதியதில் காளிமுத்து படுகாயமடைந்து, தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.

இந்த விபத்து தொடர்பாக, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர் செந்தில்குமார் (30) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு 6-மாதம் சிறைத் தண்டனை மற்றும் 2,000-ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சரவண பாபு உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...