கோவையில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியரின் மனைவியிடம் 5-பவுன் செயின் பறிப்பு…!

புகார் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். முன்னதாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.


கோவை: கோவையில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியரின் மனைவியிடம் 5 பவுன் செயின் பறித்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை விளாங்குறிச்சி சாலை கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயலட்சுமி (64).

இவர் வழக்கமாக தினமும் மாலையில் வீட்டின் அருகே நடை பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டின் அருகே இருந்த சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது ஜெயலட்சுமி வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்து உள்ளனர்.

அதில் ஒருவர் ஜெயலக்ஷ்மி வரும் பாதைக்கு எதிரே நடந்து வந்துள்ளார். அப்போது ஜெயலட்சுமி அருகே வந்ததும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மற்றொரு நபரிடம் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதில் ஜெயலட்சுமி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஜெயலட்சுமியை மீட்டுள்ளனர். பின்னர் அவர் சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். முன்னதாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...