12 பைக்குகள், மொபட்டுகள் திருட்டு போனதாக புகார் வந்துள்ளதையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை திருடி சென்றவர்கள் யார் ? வாகனங்கள் எங்கு உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் நேற்று இரண்டு சக்கர வாகனம் திருடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த 2 தினங்களில் 12 வாகனம்திருடு போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வி.கே.புதூர், எஸ்.ஆர் அவென்யூ பகுதியில் வசிக்கும் ஸ்ரீகாந்த் என்பவர்சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.விடுமுறையை தொடர்ந்துசொந்த ஊருக்கு வந்தார். சொந்த வேலைக்காக வெளியூர் சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார்.
அப்போது அவர் நிறுத்தி வைத்திருந்த இரண்டு சக்கர வாகனத்தை யாரோ மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது அங்குபொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றிஇருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதுரையை சேர்ந்தவர் கண்ணன் (34). இவர் கோவை இடையர் வீதியில் தங்கி நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாவிற்கு மதுரை சென்றார். அதனால் அவர் தனது மொபட்டை உறவினரிடம் கொடுத்து இருந்தார். அவர் அந்த மொபட்டில் சலிவன் வீதிக்கு சென்று அங்கு மொபட்டை நிறுத்தினார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த மொபட் திருட்டு போய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் கோவை வந்து மொபட் திருட்டு போனது குறித்து வெரைட்டிஹால் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு போன மொபட்டை தேடி வருகின்றனர்.
இதே போன்று கோவை ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி, செல்வபுரம், போத்தனூர், சரவணம்பட்டி உட்பட பகுதிகளில் பைக், மொபட் திருட்டு போனது. இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் அந்த தந்த காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தனர்.
காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டு போன வாகனங்களை திருடி சென்றவர்கள் யார் ? வாகனங்கள் எங்கு உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
கோவை மாநகரில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 12 பைக்குகள், மொபட்டுகள் திருட்டு போனதாக புகார் வந்துள்ளது. இது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை வி.கே.புதூர், எஸ்.ஆர் அவென்யூ பகுதியில் வசிக்கும் ஸ்ரீகாந்த் என்பவர்சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.விடுமுறையை தொடர்ந்துசொந்த ஊருக்கு வந்தார். சொந்த வேலைக்காக வெளியூர் சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார்.
அப்போது அவர் நிறுத்தி வைத்திருந்த இரண்டு சக்கர வாகனத்தை யாரோ மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது அங்குபொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றிஇருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதுரையை சேர்ந்தவர் கண்ணன் (34). இவர் கோவை இடையர் வீதியில் தங்கி நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாவிற்கு மதுரை சென்றார். அதனால் அவர் தனது மொபட்டை உறவினரிடம் கொடுத்து இருந்தார். அவர் அந்த மொபட்டில் சலிவன் வீதிக்கு சென்று அங்கு மொபட்டை நிறுத்தினார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த மொபட் திருட்டு போய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் கோவை வந்து மொபட் திருட்டு போனது குறித்து வெரைட்டிஹால் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு போன மொபட்டை தேடி வருகின்றனர்.
இதே போன்று கோவை ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி, செல்வபுரம், போத்தனூர், சரவணம்பட்டி உட்பட பகுதிகளில் பைக், மொபட் திருட்டு போனது. இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் அந்த தந்த காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தனர்.
காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டு போன வாகனங்களை திருடி சென்றவர்கள் யார் ? வாகனங்கள் எங்கு உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
கோவை மாநகரில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 12 பைக்குகள், மொபட்டுகள் திருட்டு போனதாக புகார் வந்துள்ளது. இது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.