திருப்பூரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தேதி மூன்று முறை ஒத்திவைப்பு: கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம்..!

கடந்த 10-ஆண்டுகளாக திருப்பூர் மாவட்ட தலைவராக இருந்து வரும் கோபி, தற்போது பதவி பறிபோய்விடுமோ என்ற தோல்வி பயத்தால் தேர்தலைத் தவிர்த்து வருவதாகக் கூறி, அவருக்கு எதிராக கட்சியினர் 70-க்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தேதி மூன்று முறை ஒத்திவைப்பு கட்சியினர் கட்சி அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி அமைப்புத் தேர்தல் நடத்துவது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே

திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட, மாநகர, மற்றும் வட்டார பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 300-பேர் இப்பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.

இதனிடையே, தேர்தல் தேதியானது கடந்த 9-தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மாவட்ட தலைவராக உள்ள கோபி வெளியூர் செல்வதாக சாக்குப் போக்குச் சொல்லி விட்டு தேர்தல் தேதி தள்ளிப் போடப்பட்டதாகவும், அதையடுத்து 12-ஆம் தேதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அப்போதும் தன்னால் வர முடியாது என்று இழுத்தடித்து வந்த நிலையில், இறுதியாக 15-ஆம் தேதி இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.



இதையடுத்து கட்சியினர் ஏராளமானோர் இன்று கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்த நிலையில், திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின், மாவட்ட தலைவர் கோபி வராமல் கூட்டத்தைத் தவிர்த்ததாகவும், இதனிடையே, கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்ட தலைவராக இருந்து வரும் கோபி, தற்போது பதவி பறிபோய்விடுமோ என்ற தோல்வி பயத்தால் தேர்தலைத் தவிர்த்து வருவதாகக் கூறி, அவருக்கு எதிராக கட்சியினர் 70-க்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே கோவை மாவட்ட தலைவரும், திருப்பூர் வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் மனோகரிடம் கட்சியினர் புகார் தெரிவித்த நிலையில், தேர்தல் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...