மன அழுத்தத்தை குறைக்க கைதிகளுக்கு சிறப்பு யோகா வகுப்பு கோவை ஈஷா சார்பில் 26-சிறைகளில் நடத்தப்பட்டது..!

இதில், யோக நமஸ்காரம், நாடி சுத்தி போன்ற எளிமையான, அதேசமயம் சக்தி வாய்ந்த யோகப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இப்பயிற்சிகளை சிறை கைதிகள் தினமும் செய்து வருவதன் மூலம் மன அழுத்தப் பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.


கோவை: குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாடும் சிறை கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்க ஈஷா சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.

அதன்படி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை, வேலூர், கடலூர், சேலம், விழுப்புரம், நாகர்கோவில் என பல்வேறு இடங்களில் உள்ள ஆண்களுக்கான மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகள் என 26 சிறைகளில் இவ்வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் மற்றும் சிறை வார்டன்கள் பங்கேற்று பயன் பெற்றனர். சத்குருவால் பயிற்சி அளிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் சிறைகளுக்கு நேரில் சென்று ‘உயிர் நோக்கம்’ என்ற 3 நாள் யோகா வகுப்பை நடத்தினர்.



இதில் யோக நமஸ்காரம், நாடி சுத்தி போன்ற எளிமையான, அதேசமயம் சக்தி வாய்ந்த யோகப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இப்பயிற்சிகளை சிறை கைதிகள் தினமும் செய்து வருவதன் மூலம் மன அழுத்தப் பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.

மேலும், முதுகுத்தண்டு வலுப்பெறும், மூட்டு வலியில் இருந்து விடுதலை பெறலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். இவ்வகுப்புகள் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குனர் சுனில் குமார் சிங் ஐ.பி.எஸ் ஒத்துழைப்புடன் மே 30-ம் தேதி முதல் ஜூன் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சிறை கைதிகளுக்கு இதுபோன்ற இலவச யோகா வகுப்புகளை கடந்த 30 வருடங்களாக ஈஷா நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...