குடி போதையில் லாரியை திருடிச் சென்ற போதை ஆசாமியை ஜிபிஎஸ் கருவி மூலம் போலீசார் கண்டுபிடித்து கடத்தி சென்ற லாரியை மீட்டதுடன் போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
கோவை: குடி போதையில் லாரியை திருடிச் சென்ற போதை ஆசாமியை ஜிபிஎஸ் கருவி மூலம் போலீசார் கண்டுபிடித்து கடத்தி சென்ற லாரியை மீட்டதுடன் போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் மது. பேப்பர் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான லாரியில் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த தங்கமுத்து என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை பணியை முடித்துவிட்டு, வீட்டின் அருகே லாரியை நிறுத்தியுள்ளார். பின் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது லாரி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் லாரி உரிமையாளர் மதுவுக்கு கொடுத்த தகவலின் பேரில், மது ஆனைமலை போலீசாருக்கு புகார் அளித்தார்.
இதையடுத்து, லாரியில் பொருத்தியிருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் போலீசார் ஆய்வு செய்ததில் லாரி குமரலிங்கம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று ஆனைமலை போலீசார் மற்றும் குமரலிங்கம் போலீசார் இணைந்து லாரியை மடக்கிப் பிடித்தனர். பின்னர், லாரியில் இருந்த திவான்சாபுதூர் பகுதியை சேர்ந்த பஞ்சலிங்கம்(33) என்பவரிடம், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குடிபோதையில் லாரியை திருடிச் சென்றதாக தெரிவித்துள்ளார். லாரியை திருடிச் சென்ற பஞ்ச லிங்கத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் கடத்திச் செல்லப்பட்ட லாரியை மீட்டனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் மது. பேப்பர் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான லாரியில் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த தங்கமுத்து என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை பணியை முடித்துவிட்டு, வீட்டின் அருகே லாரியை நிறுத்தியுள்ளார். பின் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது லாரி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் லாரி உரிமையாளர் மதுவுக்கு கொடுத்த தகவலின் பேரில், மது ஆனைமலை போலீசாருக்கு புகார் அளித்தார்.
இதையடுத்து, லாரியில் பொருத்தியிருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் போலீசார் ஆய்வு செய்ததில் லாரி குமரலிங்கம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று ஆனைமலை போலீசார் மற்றும் குமரலிங்கம் போலீசார் இணைந்து லாரியை மடக்கிப் பிடித்தனர். பின்னர், லாரியில் இருந்த திவான்சாபுதூர் பகுதியை சேர்ந்த பஞ்சலிங்கம்(33) என்பவரிடம், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குடிபோதையில் லாரியை திருடிச் சென்றதாக தெரிவித்துள்ளார். லாரியை திருடிச் சென்ற பஞ்ச லிங்கத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் கடத்திச் செல்லப்பட்ட லாரியை மீட்டனர்.