பொள்ளாச்சி அருகே குடிபோதையில் லாரியை திருடிச் சென்ற ஆசாமி: ஜி.பி.எஸ் கருவி மூலம் சிக்கினார்!

குடி போதையில் லாரியை திருடிச் சென்ற போதை ஆசாமியை ஜிபிஎஸ் கருவி மூலம் போலீசார் கண்டுபிடித்து கடத்தி சென்ற லாரியை மீட்டதுடன் போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.


கோவை: குடி போதையில் லாரியை திருடிச் சென்ற போதை ஆசாமியை ஜிபிஎஸ் கருவி மூலம் போலீசார் கண்டுபிடித்து கடத்தி சென்ற லாரியை மீட்டதுடன் போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் மது. பேப்பர் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான லாரியில் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த தங்கமுத்து என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை பணியை முடித்துவிட்டு, வீட்டின் அருகே லாரியை நிறுத்தியுள்ளார். பின் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது லாரி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் லாரி உரிமையாளர் மதுவுக்கு கொடுத்த தகவலின் பேரில், மது ஆனைமலை போலீசாருக்கு புகார் அளித்தார்.

இதையடுத்து, லாரியில் பொருத்தியிருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் போலீசார் ஆய்வு செய்ததில் லாரி குமரலிங்கம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று ஆனைமலை போலீசார் மற்றும் குமரலிங்கம் போலீசார் இணைந்து லாரியை மடக்கிப் பிடித்தனர். பின்னர், லாரியில் இருந்த திவான்சாபுதூர் பகுதியை சேர்ந்த பஞ்சலிங்கம்(33) என்பவரிடம், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குடிபோதையில் லாரியை திருடிச் சென்றதாக தெரிவித்துள்ளார். லாரியை திருடிச் சென்ற பஞ்ச லிங்கத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் கடத்திச் செல்லப்பட்ட லாரியை மீட்டனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...