கோவை மாநகரில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளராக, பொறுப்பேற்றுக் கொண்ட மதிவாணன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளராக பணியாற்றி வந்த செந்தில்குமார், அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது, அவருக்கு பதிலாக நெல்லையில் ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றிய மதிவாணன், மாநகர துணை ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
இன்று கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளராக, மதிவாணன் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் போது: "கோவை மாநகரில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது கண்காணித்து, அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெற்றோர்கள் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்கி தருவதை தவிர்க்க வேண்டும். விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்", என்றார்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட போக்குவரத்து துணை ஆணையாளருக்கு காவல் ஆய்வாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளராக, மதிவாணன் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் போது: "கோவை மாநகரில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது கண்காணித்து, அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெற்றோர்கள் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்கி தருவதை தவிர்க்க வேண்டும். விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்", என்றார்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட போக்குவரத்து துணை ஆணையாளருக்கு காவல் ஆய்வாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.