பெற்றோர்களே, பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுக்காதீர்கள் - கோவை போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன்…!

கோவை மாநகரில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளராக, பொறுப்பேற்றுக் கொண்ட மதிவாணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளராக பணியாற்றி வந்த செந்தில்குமார், அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது, அவருக்கு பதிலாக நெல்லையில் ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றிய மதிவாணன், மாநகர துணை ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

இன்று கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளராக, மதிவாணன் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் போது: "கோவை மாநகரில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது கண்காணித்து, அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெற்றோர்கள் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்கி தருவதை தவிர்க்க வேண்டும். விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்", என்றார்.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட போக்குவரத்து துணை ஆணையாளருக்கு காவல் ஆய்வாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...