அனைத்து வரிகள் கட்டியும் நிலத்திற்கான பட்டா கிடைக்கவில்லை: பதாகைகளுடன் கோவை ஆட்சியரிடம் மனு..!

கோவை வெங்கிட்டாபுரம் ஆர்.கே.நாயுடு லேஅவுட் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் தங்கள் நிலத்திற்கு பட்டா வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: அனைத்து வரிகள் கட்டியும் நிலத்திற்கான பட்டா கிடைக்கவில்லை என பதாகைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கோவை வெங்கிட்டாபுரம் ஆர்.கே.நாயுடு லேஅவுட் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் தங்கள் நிலத்திற்கு பட்டா வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், கோவை மாநகராட்சி 43-வது வார்டில் உள்ள ஆர்.கே.நாயுடு லே அவுட் பிளாக் 10,26,28-ல் இது வரை பட்டா வழங்கப்படவில்லை எனவும், இதுகுறித்து நில அளவை தனி வட்டாட்சியரிடம் கேட்ட போது உரிய விளக்கமளிக்காமல் அலைக்கழிப்பதாக தெரிவித்தனர்.

மேலும், பட்டா இல்லாமலேயே மாநகராட்சிக்கும் மின் வாரியத்திற்கு அனைத்து வரிகளை கட்டி வருவதாக, தெரிவித்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து பட்டா கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அவர்கள் அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...