கோவை வெங்கிட்டாபுரம் ஆர்.கே.நாயுடு லேஅவுட் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் தங்கள் நிலத்திற்கு பட்டா வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை: அனைத்து வரிகள் கட்டியும் நிலத்திற்கான பட்டா கிடைக்கவில்லை என பதாகைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கோவை வெங்கிட்டாபுரம் ஆர்.கே.நாயுடு லேஅவுட் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் தங்கள் நிலத்திற்கு பட்டா வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், கோவை மாநகராட்சி 43-வது வார்டில் உள்ள ஆர்.கே.நாயுடு லே அவுட் பிளாக் 10,26,28-ல் இது வரை பட்டா வழங்கப்படவில்லை எனவும், இதுகுறித்து நில அளவை தனி வட்டாட்சியரிடம் கேட்ட போது உரிய விளக்கமளிக்காமல் அலைக்கழிப்பதாக தெரிவித்தனர்.
மேலும், பட்டா இல்லாமலேயே மாநகராட்சிக்கும் மின் வாரியத்திற்கு அனைத்து வரிகளை கட்டி வருவதாக, தெரிவித்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து பட்டா கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அவர்கள் அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி மனு அளித்தனர்.
கோவை வெங்கிட்டாபுரம் ஆர்.கே.நாயுடு லேஅவுட் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் தங்கள் நிலத்திற்கு பட்டா வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், கோவை மாநகராட்சி 43-வது வார்டில் உள்ள ஆர்.கே.நாயுடு லே அவுட் பிளாக் 10,26,28-ல் இது வரை பட்டா வழங்கப்படவில்லை எனவும், இதுகுறித்து நில அளவை தனி வட்டாட்சியரிடம் கேட்ட போது உரிய விளக்கமளிக்காமல் அலைக்கழிப்பதாக தெரிவித்தனர்.
மேலும், பட்டா இல்லாமலேயே மாநகராட்சிக்கும் மின் வாரியத்திற்கு அனைத்து வரிகளை கட்டி வருவதாக, தெரிவித்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து பட்டா கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அவர்கள் அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி மனு அளித்தனர்.