கோவை பேரூர் அருகே தனியார் தோட்டம் மற்றும் வீடுகளை சூறையாடிய காட்டு யானைகள்..!

நள்ளிரவு தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்ததோடு, வீட்டின் சுவர்களை இடித்த யானை கூட்டம் அதிகாலையில் தோட்டத்திலிருந்து வனப்பகுதியை நோக்கிச் சென்றது.



கோவை: கோவை பேரூர் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்தியதோடு, வீட்டின் சுவர்களை இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பேரூர் அடுத்த தி.தி பாளையம் கிராமத்தில் உள்ள குட்டை தோட்டம் அருகே தாமோதரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்திற்குள் நேற்று இரவு புகுந்த 4-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்ட பயிர்களை சேதம் செய்தது.



இதையடுத்து, தாமோதரன் தங்கியிருந்த வீட்டின், சுவர் மற்றும்கதவுகளை உடைத்து உள்ளே இருந்த பாத்திரங்களையும் சேதப்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் உயிருக்குப் பயந்து அச்சத்தில் இருந்தனர்.



காட்டு யானைகள் வந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் வனத்துறையினர் தாமதமாக வந்ததால் ஊழியர்கள் வருவதற்கு முன்பாக யானைகள் அங்கிருந்து சென்று விட்டது.



நள்ளிரவு தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்ததோடு வீட்டின் சுவர்களை இடித்த யானை கூட்டம் அதிகாலையில் தோட்டத்திலிருந்து வனப்பகுதியை நோக்கிச் சென்றது, இந்த சம்பவம்அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...