கோவை பேரூர் அருகே தனியார் தோட்டம் மற்றும் வீடுகளை சூறையாடிய காட்டு யானைகள்..!

நள்ளிரவு தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்ததோடு, வீட்டின் சுவர்களை இடித்த யானை கூட்டம் அதிகாலையில் தோட்டத்திலிருந்து வனப்பகுதியை நோக்கிச் சென்றது.



கோவை: கோவை பேரூர் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்தியதோடு, வீட்டின் சுவர்களை இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பேரூர் அடுத்த தி.தி பாளையம் கிராமத்தில் உள்ள குட்டை தோட்டம் அருகே தாமோதரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்திற்குள் நேற்று இரவு புகுந்த 4-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்ட பயிர்களை சேதம் செய்தது.



இதையடுத்து, தாமோதரன் தங்கியிருந்த வீட்டின், சுவர் மற்றும்கதவுகளை உடைத்து உள்ளே இருந்த பாத்திரங்களையும் சேதப்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் உயிருக்குப் பயந்து அச்சத்தில் இருந்தனர்.



காட்டு யானைகள் வந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் வனத்துறையினர் தாமதமாக வந்ததால் ஊழியர்கள் வருவதற்கு முன்பாக யானைகள் அங்கிருந்து சென்று விட்டது.



நள்ளிரவு தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்ததோடு வீட்டின் சுவர்களை இடித்த யானை கூட்டம் அதிகாலையில் தோட்டத்திலிருந்து வனப்பகுதியை நோக்கிச் சென்றது, இந்த சம்பவம்அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...