முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம்: அண்ணா பல்கலை மாணவ மாணவியர் அதிருப்தி

வழக்கமாக, தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் கடந்தும் இன்று வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை, இதனால், மாணவ மாணவியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.


கோவை: தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியர் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேர்வு எழுதினர்.

வழக்கமாக, தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் கடந்தும் இன்று வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இதனால், மாணவ மாணவியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து கோவை மண்டல அண்ணா பல்கலை அதிகாரிகள் கூறியதாவது: நான்கு ஆங்குகளுக்கு ஒரு முறை அண்ணா பல்கலையில் தேர்வு மதிப்பீடு உள்ளிட்ட நடைமுறைகளில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். கடந்த 2017ல் மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது, நான்கு ஆண்டுகளுக்கு பின் 2022 இந்த ஆண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

இதன் காரணமாகவே கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஆகிறது. மேலும், விவரங்களுக்கு சென்னையில் உள்ள அண்ணா பல்கலை தேர்வு துறை அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும்", இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தேர்வு முடிவு தாமதம் குறித்துமுதலாமாண்டு மாணவ, மாணவியர் கூறுகையில், "வழக்கமாக முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும். தற்போது, ஜூன் மாதம் கடந்தும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்றும் தெரியவில்லை. முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

ஆனால் முடிவுகள் கால தாமதமாகி வருவதால் மன சோர்வும், அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட அண்ணா பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அனைத்து மாணவ மாணவியரின் எதிர்பார்ப்பாகும்",

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...