வழக்கமாக, தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் கடந்தும் இன்று வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை, இதனால், மாணவ மாணவியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கோவை: தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியர் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேர்வு எழுதினர்.
வழக்கமாக, தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் கடந்தும் இன்று வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இதனால், மாணவ மாணவியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து கோவை மண்டல அண்ணா பல்கலை அதிகாரிகள் கூறியதாவது: நான்கு ஆங்குகளுக்கு ஒரு முறை அண்ணா பல்கலையில் தேர்வு மதிப்பீடு உள்ளிட்ட நடைமுறைகளில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். கடந்த 2017ல் மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது, நான்கு ஆண்டுகளுக்கு பின் 2022 இந்த ஆண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
இதன் காரணமாகவே கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஆகிறது. மேலும், விவரங்களுக்கு சென்னையில் உள்ள அண்ணா பல்கலை தேர்வு துறை அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும்", இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தேர்வு முடிவு தாமதம் குறித்துமுதலாமாண்டு மாணவ, மாணவியர் கூறுகையில், "வழக்கமாக முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும். தற்போது, ஜூன் மாதம் கடந்தும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்றும் தெரியவில்லை. முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
ஆனால் முடிவுகள் கால தாமதமாகி வருவதால் மன சோர்வும், அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட அண்ணா பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அனைத்து மாணவ மாணவியரின் எதிர்பார்ப்பாகும்",
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வழக்கமாக, தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் கடந்தும் இன்று வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இதனால், மாணவ மாணவியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து கோவை மண்டல அண்ணா பல்கலை அதிகாரிகள் கூறியதாவது: நான்கு ஆங்குகளுக்கு ஒரு முறை அண்ணா பல்கலையில் தேர்வு மதிப்பீடு உள்ளிட்ட நடைமுறைகளில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். கடந்த 2017ல் மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது, நான்கு ஆண்டுகளுக்கு பின் 2022 இந்த ஆண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
இதன் காரணமாகவே கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஆகிறது. மேலும், விவரங்களுக்கு சென்னையில் உள்ள அண்ணா பல்கலை தேர்வு துறை அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும்", இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தேர்வு முடிவு தாமதம் குறித்துமுதலாமாண்டு மாணவ, மாணவியர் கூறுகையில், "வழக்கமாக முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும். தற்போது, ஜூன் மாதம் கடந்தும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்றும் தெரியவில்லை. முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
ஆனால் முடிவுகள் கால தாமதமாகி வருவதால் மன சோர்வும், அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட அண்ணா பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அனைத்து மாணவ மாணவியரின் எதிர்பார்ப்பாகும்",
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.