கோவை வால்பாறையை சுற்றி பார்க்க வந்த கேரள மாநில வாலிபர் நீரில் மூழ்கி பலி..!

பாறை இடுக்கில் கால் சிக்கி கொண்டதால் வெளியே வர முடியாமல் மனைவி குழந்தைகள் கண் எதிரே நீரில் மூழ்கி பலியானார்.


கோவை: வால்பாறையை சுற்றி பார்க்க வந்த கேரள மாநில வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுற்றி பார்க்க பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு கூழாங்கல் ஆற்றில் குளித்து விளையாடி மகிழ்ந்து செல்கின்றனர்.

அதை போல் வால்பாறையைச் சுற்றிப் பார்க்கக் கேரளா மாநிலம் தலசேரி பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்து வந்த மன்சூர் மற்றும் அவரது மனைவி இரண்டு குழந்தைகள் மற்றும் உறவினர்கள் இரண்டு குடும்பத்தாரும் வால்பாறைக்கு நேற்று மாலை வந்தனர்.

தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தனர். இன்று மதியம் வால்பாறை அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் ஆற்றில் குளித்து விளையாடி மகிழ்ந்தனர். அதில் மன்சூர் என்பவர் ஆற்றில் குளிப்பதற்கு தண்ணீரில் குதித்து உள்ளார்.

தண்ணீர்க்குள் பாறை இடுக்கில் கால் சிக்கி கொண்டதால் வெளியே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கி மனைவி குழந்தைகள் கண் எதிரே நீரில் மூழ்கி பலியானார். பின் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.



உடல் கிடைக்காததால் வால்பாறை பகுதியில் தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள். உடலை எடுக்கும் பணியில் ஈடுபட்டும் காலேஸ்வரன் என்பவரை அழைத்து வந்து தண்ணீரில் மூழ்கியவரைக் கைப்பற்றினர்.



வால்பாறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக உடல் வைக்கப்பட்டு உள்ளது. சந்தோஷமாகச் சுற்றுலா வந்த இடத்தில் ஒருவர் இறந்ததால் குடும்பம் துக்கத்தைப் பார்க்க நேரிட்டது. இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...