திருப்பூரில் 'என் குப்பை என் பொறுப்பு' - உறுதிமொழியுடன் தூய்மைப் பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைப்பு..!

தூய்மை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர், துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தானும் மார்க்கெட்டில் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தார். அவரை தொடர்ந்து எம்.எல்.ஏ, மேயர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் என அனைவரும் தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் என் குப்பை என் பொறுப்பு உறுதிமொழியுடன் தீவிர தூய்மைப் பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மைப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தீவிர தூய்மைப்பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் தூய்மை பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுதிமொழி வாசித்து துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் வினீத், மாநகராட்சி ஆணையர் கிராந்திக்குமார் பாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



தூய்மை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர், துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தானும் மார்க்கெட்டில் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தார்.

அவரை தொடர்ந்து எம்.எல்.ஏ, மேயர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் என அனைவரும் தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.



சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...