தூய்மை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர், துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தானும் மார்க்கெட்டில் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தார். அவரை தொடர்ந்து எம்.எல்.ஏ, மேயர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் என அனைவரும் தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் என் குப்பை என் பொறுப்பு உறுதிமொழியுடன் தீவிர தூய்மைப் பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மைப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தீவிர தூய்மைப்பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் தூய்மை பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுதிமொழி வாசித்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் வினீத், மாநகராட்சி ஆணையர் கிராந்திக்குமார் பாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூய்மை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர், துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தானும் மார்க்கெட்டில் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தார்.
அவரை தொடர்ந்து எம்.எல்.ஏ, மேயர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் என அனைவரும் தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.