'ஆபரேஷன் கந்து வட்டி' -கோவையில் பெண் மீது முதல் கந்து வட்டி வழக்கு பாய்ந்தது…!

ஆப்ரேஷன் கந்துவட்டி அறிமுகமாகி கோவையில் முதல் கந்து வட்டி வழக்கு ஒரு பெண் மீது பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, கந்து வட்டி மற்றும் ஆள் கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க, ஆபரேஷன் கந்துவட்டி என்ற பெயரில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம் அதிக வட்டி கேட்டு மிரட்டுதல், வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்குதல், சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் கந்து வட்டி தொடர்பான வழக்குகள் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (34) என்பவர் பெரிய கடைவீதி போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் தான் சில மாதங்களுக்கு முன்பு சந்திரா என்பவரிடம் ரூ.30,000 வட்டிக்கு வாங்கியதாகவும், அதன் பின்னர் மீண்டும் அவரிடம் ரூ.44,000 வாங்கியதாகவும், ஆனால் அவர் அளித்த கால அவகாசத்திற்கு முன்பாகவே கூடுதல் வட்டியுடன் ரூ.60 ஆயிரம் திருப்பித் தர வேண்டும் என மிரட்டுவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து விசாரித்த போலீசார் பெண் சந்திரா மீது அதிக வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆப்ரேஷன் கந்துவட்டி அறிமுகமாகி கோவையில் முதல் கந்துவட்டி வழக்கு ஒரு பெண் மீது பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...