படுகாயம் அடைந்த அசாம் மாநில தொழிலாளிக்கு வால்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை: வால்பாறையில் கரடி தாக்கி அசாம் மாநில தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக, வால்பாறை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் யானை சிறுத்தை புலி கரடி ஆகிய வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வால்பாறை அருகே மாணிக்க எஸ்டேட் பகுதிசெங்குத்து பாறை என்ற இடத்தில் அசாம் மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இன்று காலை 8.50 மணிக்கு தேயிலை தோட்டத்திற்கு மருந்து தெளிக்கும் பணியில் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சுற்றி திரிந்த கரடி ஒன்று புதுவான் ஒரான் 29-என்பவரின் காலில் கடித்து தாக்கியது.
அவரை அருகில் இருந்தவர்கள் வால்பாறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதே போன்றசில தினங்களுக்கு முன்பு அதை இடத்தில் அசாம் மாநில தொழில்லாரை கரடி தாக்கியது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் யானை சிறுத்தை புலி கரடி ஆகிய வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வால்பாறை அருகே மாணிக்க எஸ்டேட் பகுதிசெங்குத்து பாறை என்ற இடத்தில் அசாம் மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இன்று காலை 8.50 மணிக்கு தேயிலை தோட்டத்திற்கு மருந்து தெளிக்கும் பணியில் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சுற்றி திரிந்த கரடி ஒன்று புதுவான் ஒரான் 29-என்பவரின் காலில் கடித்து தாக்கியது.
அவரை அருகில் இருந்தவர்கள் வால்பாறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதே போன்றசில தினங்களுக்கு முன்பு அதை இடத்தில் அசாம் மாநில தொழில்லாரை கரடி தாக்கியது குறிப்பிடத்தக்கது.