திமுகவுக்கு மூடுவிழா நடத்தும் அளவுக்கு திமுக ஆட்சி உள்ளது-கோவை பொள்ளாச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டிவி.தினகரன் பேட்டி..!

மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத சூழலில் திமுக இருப்பதால், திமுகவுக்கு மு.க.ஸ்டாலின் மூடுவிழா நடத்துவார் என்று பேட்டியின் போது டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் கொங்கு மண்டல பொறுப்பாளர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், திமுக ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு முன்பு வரை புத்தர் போல் காண்பித்து, மக்களுக்காகப் போராடுவது போல் நடித்து மக்களை ஏமாற்றியுள்ளனர்.



சொத்து வரி உயர்த்த மாட்டோம் என்று சொன்ன திமுக, தற்போது 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி உள்ளது. ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக கூறி இன்னும் வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் எப்படி குற்றச்சாட்டுக்கள், ஊழல்கள் இருந்ததோ அதற்கு மேலாக திமுக ஆட்சியில் உள்ளது என்றும், மக்களின் நண்பனாக இருப்பதாக கூறிய திமுக, தற்போது மக்களுக்கு விரோதியாக மாறி உள்ளது.

மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத சூழலில் திமுக இருப்பதால், திமுகவுக்கு மு.க.ஸ்டாலின் மூடுவிழா நடத்துவார் என்று பேட்டியின் போது டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...