மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத சூழலில் திமுக இருப்பதால், திமுகவுக்கு மு.க.ஸ்டாலின் மூடுவிழா நடத்துவார் என்று பேட்டியின் போது டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் கொங்கு மண்டல பொறுப்பாளர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், திமுக ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு முன்பு வரை புத்தர் போல் காண்பித்து, மக்களுக்காகப் போராடுவது போல் நடித்து மக்களை ஏமாற்றியுள்ளனர்.

சொத்து வரி உயர்த்த மாட்டோம் என்று சொன்ன திமுக, தற்போது 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி உள்ளது. ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக கூறி இன்னும் வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் எப்படி குற்றச்சாட்டுக்கள், ஊழல்கள் இருந்ததோ அதற்கு மேலாக திமுக ஆட்சியில் உள்ளது என்றும், மக்களின் நண்பனாக இருப்பதாக கூறிய திமுக, தற்போது மக்களுக்கு விரோதியாக மாறி உள்ளது.
மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத சூழலில் திமுக இருப்பதால், திமுகவுக்கு மு.க.ஸ்டாலின் மூடுவிழா நடத்துவார் என்று பேட்டியின் போது டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் கொங்கு மண்டல பொறுப்பாளர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், திமுக ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு முன்பு வரை புத்தர் போல் காண்பித்து, மக்களுக்காகப் போராடுவது போல் நடித்து மக்களை ஏமாற்றியுள்ளனர்.
சொத்து வரி உயர்த்த மாட்டோம் என்று சொன்ன திமுக, தற்போது 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி உள்ளது. ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக கூறி இன்னும் வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் எப்படி குற்றச்சாட்டுக்கள், ஊழல்கள் இருந்ததோ அதற்கு மேலாக திமுக ஆட்சியில் உள்ளது என்றும், மக்களின் நண்பனாக இருப்பதாக கூறிய திமுக, தற்போது மக்களுக்கு விரோதியாக மாறி உள்ளது.
மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத சூழலில் திமுக இருப்பதால், திமுகவுக்கு மு.க.ஸ்டாலின் மூடுவிழா நடத்துவார் என்று பேட்டியின் போது டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.