கோவை தடாகம் அருகே மார்பு பகுதியில் பலத்த காயத்துடன் சுற்றி வந்த காட்டு மாட்டுக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை!

கோவையில் பெரிய தடாகம் அருகிலுள்ள வனப்பகுதியில் பலத்த காயத்துடன் சுற்றி வந்த காட்டு மாட்டுக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் பெரிய தடாகம் அருகிலுள்ள வனப்பகுதியில் பலத்த காயத்துடன் சுற்றி வந்த காட்டு மாட்டுக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கோவை வனச்சரகம் பெரியதடாகம் பகுதியில் வனப்பகுதிக்கு சுமார் 300 மீட்டர் தொலைவில் காட்டு மாடு ஒன்று சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின் பேரில், கோவை வனச்சரக பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காட்டு மாட்டிற்கு வயிற்று பகுதியில் காயம், உடல் மெலிந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.



இதையடுத்து சுகுமார் தலைமையில் அங்கு கால்நடை மருத்துவ குழுவினர் காயமடைந்திருந்த காட்டு மாட்டுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.



வயிற்று பகுதியில் உள்ள காயம் சுத்தம் செய்யப்பட்டு மருத்து போடப்பட்டது. இதையடுத்து மாட்டிற்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து உள்ளிட்ட மருந்து ஊசிகள் போடப்பட்டது.

இது குறித்து மருத்துவர்கள் கூறும் போது: சுமார் 8 வயதுடைய காட்டு மாட்டிற்கு மார்பு 20 செ மீ ஆழத்திற்கு காயம் ஏற்பட்டு, மார்பு அருகே புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. முதல்கட்டமாக காயம் உள்ள பகுதிகள் தூய்மை செய்யப்பட்டு கட்டுப்போடப்பட்டுள்ளதாகவும், தற்போது உடல்நிலை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், இதனால் நோய் எதிர்ப்பு மற்றும் வைட்டமின் மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் குளுக்கோஸ் செலுத்தப்பட்டதுடன் நீர் அருந்த கொடுத்து தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...