கோவையில் முகத்தில் பலத்த காயத்துடன் தவித்து வந்த ஆதரவற்ற மூதாட்டி பத்திரமாக மீட்பு - பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுகள்..!

கோவையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் சாலையில் அமர்ந்திருந்த மூதாட்டியை, மீட்டு முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்த பந்தய சாலை உதவி ஆய்வாளர் சைனபாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


கோவை: கோவையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் சாலையில் அமர்ந்திருந்த மூதாட்டியை, பந்தய சாலை போலீசார் மீட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்த சம்பவம் பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.



கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே உள்ள சாலை ஓரத்தில் மூதாட்டி ஒருவர் முகத்தில் பலத்த காயமடைந்து, உடல் நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நேரமாக அமர்ந்து கொண்டு இருந்ததாக தெரிகிறது. மூதாட்டியின் பரிதாபமான நிலைமையை பார்த்த பொதுமக்கள் சிலர், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் வந்த பெண் உதவி ஆய்வாளர் சைனபா, மூதாட்டியிடம் விசாரித்தபோது, அவர் கோவை அன்னூர் புளியம்பட்டியை சேர்ந்த சாமுவேல் என்பவரது மனைவி தனலட்சுமி (56). என்பதும், உறவினர்கள் யாரும் இல்லாததால் ஆதரவற்று நீண்ட காலமாக கிடைக்கும் உணவை சாப்பிட்டு சாலை ஓரத்தில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தன்னார்வலர்கள் உதவியுடன் மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டு கோவை கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டுவரும் ஆஞ்சநேயா ஆதரவற்றோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். மூதாட்டிக்கு, சிகிச்சை அளித்து அங்கேயே அவர் பராமரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து உடனடியாக சென்று, மூதாட்டியை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்த பந்தய சாலை உதவி ஆய்வாளர் சைனபாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...