50 வது உலக சுற்றுச்சூழல் தினம்: கோவை 'பிரிக்கால் லிமிடெட்' நிறுவனத்தில் 800 மரக்கன்றுகள் நடவு நிகழ்ச்சி!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை பிரிக்கால் லிமிடெட் நிறுவனத்தில் 800 மரக்கன்றுகள் நட்டு வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.


கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை பிரிக்கால் லிமிடெட் நிறுவனத்தில் 800 மரக்கன்றுகள் நட்டு வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.



பூவுலகில் இயற்கை, சூழலியல் மற்றும் உயிரியல் மேம்பாட்டிற்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள "உலக சுற்றுச்சூழல் தினத்தை” உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் கொண்டாடி வருகின்றனர். இயற்கை அன்னையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5ம் தேதி “உலக சுற்றுச்சூழல் தினம்" அனுசரிக்கப்பட்டு வருகிறது.



இந்த ஆண்டு, “ஒரே ஒரு பூமி” என்ற மையக் கருத்தை முன்னிருத்தி “இயற்கையுடன் இணைந்து நிலையான நல்லிணக்கத்துடன் வாழ்வது” குறித்து விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துவதற்கான நோக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் ஒற்றுமை மேம்படுத்த மனிதகுலத்தினரிடையே அமைதி, நல்லிணக்கம், செழிப்பு மற்றும் ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க தேவையான ஆக்கபூர்வமான சூழலை உருவாக்குவது இந்த மையக் கருத்தின் நோக்கமாக உள்ளது. மேலும், இந்த கருத்து, நமது வாழ்வியல் முறைகளில் அனைத்து வகைகளிலும் மாசற்ற நிலைகளை உருவாக்கி இயற்கை அன்னையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.



தனி மனிதர்களால் செய்யப்படும் எந்த ஒரு சிறு முயற்சியும் சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். அந்த வகையில், 2022ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “பிரிக்கால் லிமிடெட்” நிறுவனத்தில் இயற்கை அன்னையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நிறுவன ஊழியர்கள், ஊழியர் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளிடையே மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.



50 வது உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “பிரிக்கால் லிமிடெட்” நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை வனிதா மோகன்- Chairman, P.M.கணேஷ் Chief Executive Officer, அமீர்-Director Technology & Quality Systems, சித்தார்த் Chief Strategy Officer மற்றும் இதர ஊழியர்களுடன் இணைந்து இந்நிறுவன தொழிற்சாலைகளில் நேற்று 800 மரக்கன்றுகளை நட்டு வைத்து நமது பூமித்தாயை பாதுகாக்கும் உன்னத முயற்சியில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளனர்.







Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...