தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை: தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் மத்திய அலுவலக நுழைவாயில் முன்பு தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்வாரியத்தில் காலியாக உள்ள 52 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும், ரீ டிப்ளாய்மெண்ட் முறையை கைவிட வேண்டும், தமிழக அரசின் உத்தரவாதத்துடன் கூடிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், கேங்மேன் பயிற்சி பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளம் நிரந்தர ஊழியர்களுக்கு உண்டான அனைத்து சலுகைகளையும் வழங்க உத்தரவிட வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தனர். மேலும் தங்கள் கோரிக்கைகளை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் மத்திய அலுவலக நுழைவாயில் முன்பு தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்வாரியத்தில் காலியாக உள்ள 52 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும், ரீ டிப்ளாய்மெண்ட் முறையை கைவிட வேண்டும், தமிழக அரசின் உத்தரவாதத்துடன் கூடிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், கேங்மேன் பயிற்சி பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளம் நிரந்தர ஊழியர்களுக்கு உண்டான அனைத்து சலுகைகளையும் வழங்க உத்தரவிட வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தனர். மேலும் தங்கள் கோரிக்கைகளை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.