கோவையில் காளப்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, இருசக்கர வாகனம் திருட்டு…!

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பீளமேடு போலீசார், கைரேகை நிபுணர்களுடன் வந்து வீட்டில் பதிவான தடையங்களை சேகரித்தனர். வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை காளப்பட்டி சேரன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு, பொறியாளர். இவர் கடந்த 4-ந் தேதி நண்பரின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க தென்காசி சென்றிருந்தார். பின்னர், இன்று காலை தென்காசியில் இருந்து கோவை திரும்பினார்.

அப்போது வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது உள்ளே இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி விளக்கு, குங்குமசிமிழ், 1.5 பவுன் நகை உள்ளிட்ட பொருட்கள் மாயமானது தெரியவந்தது.

மேலும், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனமும் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து, அவர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் வந்து வீட்டில் பதிவான தடையங்களை சேகரித்தனர், மேலும் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...