கோவையில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை!

கோவை துடியலூர் பகுதியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.


கோவை: கோவை துடியலூர் பகுதியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோவை துடியலூர் ராக்கி பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (44). தனியார் நிறுவன மேலாளர். இவர் கடந்த 4ம் தேதி குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள மனைவியின் வீட்டுக்கு கோவில் திருவிழாவிற்கு சென்றார். சம்பவத்தன்று அவரது வீட்டின் அருகே உள்ள குணசேகரன் என்பவர் தனசேகரனின் வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்தார். இதுகுறித்து அவர் தனசேகரனுக்கு தகவல் அளித்துள்ளார். இதைக்கேட்டு அவர் உடனே பெருமாநல்லூரில் இருந்து வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த கம்மல், மோதிரம், செயின் உள்பட 10 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தனசேகரன் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...