கோவையில் செலவுக்கு பணம் தர மறுப்பு தெரிவித்த இளைஞரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய நண்பனை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் செலவுக்கு பணம் தர மறுப்பு தெரிவித்த இளைஞரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய நண்பனை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை புலியகுளம் அம்மன் குளம் 2வது வீதியை சேர்ந்தவர் அபிஷேக் (21). இவர் தனியார் ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அபிஷேக் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார். அப்போது பாப்பநாயக்கன்பாளையம் காய் கடை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, அவரது நண்பர் கோகுல கிருஷ்ணன் (23) என்பவர் மறித்து அபிஷேக்கிடம் செலவுக்கு பணம் கேட்டார். அதற்கு அவர் தற்போது பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கோகுலகிருஷ்ணன் அபிஷேக்கின் செல்போனை பறித்துக் கொண்டார். அவர் திருப்பி கேட்டபோது, கோகுல கிருஷ்ணன் கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோகுலகிருஷ்ணன் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து அபிஷேக்கை தாக்கினார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி விட்டு சென்றார். இதில் அபிஷேக் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அபிஷேக் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
கோவை புலியகுளம் அம்மன் குளம் 2வது வீதியை சேர்ந்தவர் அபிஷேக் (21). இவர் தனியார் ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அபிஷேக் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார். அப்போது பாப்பநாயக்கன்பாளையம் காய் கடை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, அவரது நண்பர் கோகுல கிருஷ்ணன் (23) என்பவர் மறித்து அபிஷேக்கிடம் செலவுக்கு பணம் கேட்டார். அதற்கு அவர் தற்போது பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கோகுலகிருஷ்ணன் அபிஷேக்கின் செல்போனை பறித்துக் கொண்டார். அவர் திருப்பி கேட்டபோது, கோகுல கிருஷ்ணன் கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோகுலகிருஷ்ணன் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து அபிஷேக்கை தாக்கினார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி விட்டு சென்றார். இதில் அபிஷேக் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அபிஷேக் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.