இன்று மதியம், மதுக்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து விட்டு, மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற போது எதிரே வந்த டேங்கர் லாரி அவர் கார் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை: கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி - கார் மீது மோதிய விபத்தில், கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவி சம்பவம் இடத்திலேயே பலியானார்.
கோவை மதுக்கரையை சேர்ந்தவர் ராமசிகாபதி, இவரது மகள் ராமசிவானி (22). இவர் கோவை அரசு மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இன்று மதியம், ராமசிவானி மதுக்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து விட்டு, மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, மதுக்கரை நெடுஞ்சாலையில் எதிரே வந்த டேங்கர் லாரி அவர் கார் மீது மோதியது.
இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து டேங்கார் லாரி ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தில்லையரசன் (44) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.