கோவை உதவித் தொகையை ஊருக்கே கொண்டு வந்து தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - முதியவர்கள் மனு!

கோவையில் முதியவர்களுக்கான உதவித் தொகையை ஊருக்கே கொண்டு வந்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதியவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவையில் முதியவர்களுக்கான உதவித் தொகையை ஊருக்கே கொண்டு வந்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதியவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை பகுதியில் உள்ள தோலம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் முதியவர்கள் அரசு வழங்கும் உதவித்தொகையை தங்களது ஊருக்கு கொண்டு வந்து தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் அளித்த மனுவில், தோலம்பாளையம் கிராமத்தில் வயதானவர்கள், கணவனை இழந்த பெண்கள் என பலரும் வசித்து வரும் நிலையில் அரசு தரப்பில் தரப்படும் உதவித் தொகையை பெறுவதற்கு 16 கிலோ மீட்டர் தூரம் சென்று பெறவேண்டி உள்ளதாகும், பேருந்து வசதி சரிவர இல்லாததால் தனியார் வாகனத்தில் பல ரூபாய் செலவழித்து சென்று உதவித்தொகையை வாங்கும் சூழல் நிலவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஓய்வு ஊதியம் தரும் ஊழியர் மகேஸ்வரி, முதியவர்களை இழிவாக நடத்துவதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டுவது அதுவும் இதுகுறித்து பலமுறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மகேஸ்வரியிடம் உதவித்தொகை பெறுவதற்கு விருப்பமில்லை எனவும், வயதானவர்களுக்கான உதவித்தொகையை கிராமத்திற்கே கொண்டு வந்து கொடுத்திட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் ஊழியரின் கணவரும் தங்களை தகாத வார்த்தைகளால் இழிவுபடுத்துவதாகும் என்று தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...