கோவை பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- 3-இளைஞர்கள் படுகாயம்..!

வழிப்பாதையில் அஜாக்கிரதையாக இருசக்கர வாகனத்தில் வந்து விபத்து ஏற்படுத்திய நபர் மீது வழக்குப்பதிவு செய்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3-இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.

பொள்ளாச்சி பாறைமேடு விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் 24-வயதான மணிகண்டன். தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் பணிக்கு செல்வதற்கு இன்று வீட்டில் இருந்து பாலக்காடு ரோடு வழியாக இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பு வந்து கொண்டிருந்தபோது, ஒரு வழிப்பாதையில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.



விபத்தில் மணிகண்டன் மற்றும் எதிரே வந்த வாகனத்தில் இருந்த குமரன் நகரைச் சேர்ந்த 22 வயதான கார்த்திக் மற்றும் பின்னால் அமர்ந்து வந்த 22 வயதான ஸ்ரீனிவாசன் ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்நிலையில், மணிகண்டனின் இருசக்கர வாகனம் பின்னால் வந்த அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கியது. சத்தம் கேட்டு பேருந்தில் இருந்தவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் இறங்கி காயமடைந்தவர்களை மீட்டனர்.



இதில், மணிகண்டனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும், கார்த்திக் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக மணிகண்டனின் உறவினர் கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் ஒரு வழிப்பாதையில் அஜாக்கிரதையாக இருசக்கர வாகனத்தில் வந்து விபத்து ஏற்படுத்திய கார்த்திக் மீது வழக்குப் பதிவு செய்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...