கோவையில் வார்டு எண் 81, 82 ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!

கோவையில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 81 மற்றும் 82 ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


கோவை: கோவையில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 81 மற்றும் 82 ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று ஆய்வு செய்தார்.





கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்‌.81 மற்றும்‌ 82 ஆகிய இடங்களில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப. நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, தூய்மைப்‌ பணியாளர்கள்‌ தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி தூய்மைப் பணிகளில்‌ ஈடுபட வேண்டும்‌ என அறிவுறுத்தினார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.81க்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., நேரில்‌ சென்று பார்வையிட்டு தூய்மைப்‌ பணியாளர்களின்‌ வருகைப் பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட டவுன்ஹால்‌ மற்றும்‌ ராஜவீதி ஆகிய பகுதிகளில்‌ உள்ள கடைகளில்‌ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பைகள்‌ பயன்படுத்தப்படுகிறதா என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., நேரில்‌ சென்று ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அறிவித்து, அதை செயல்படுத்தி வருகிறார். அதற்கு பொதுமக்கள்‌, வியாபாரிகள்‌ முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்‌ என கேட்டுக்கொண்டார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட டவுன்ஹால்‌ பகுதியில்‌ நடைபாதையில்‌ இருந்த ஆதரவற்ற முதியவரை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., நேரில்‌ சென்று நலம்‌ விசாரித்து முதியோர்‌ இல்லத்தில்‌ சேர்த்து பராமரிக்க ஏற்பாடு செய்கிறேன்.



அதற்கு உங்களுக்கு‌ விருப்பம்‌ உள்ளதா? என கேட்டறிந்தார்‌.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...