கோவையில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 81 மற்றும் 82 ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கோவை: கோவையில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 81 மற்றும் 82 ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்.81 மற்றும் 82 ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி தூய்மைப் பணிகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.81க்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட டவுன்ஹால் மற்றும் ராஜவீதி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அறிவித்து, அதை செயல்படுத்தி வருகிறார். அதற்கு பொதுமக்கள், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட டவுன்ஹால் பகுதியில் நடைபாதையில் இருந்த ஆதரவற்ற முதியவரை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., நேரில் சென்று நலம் விசாரித்து முதியோர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்க ஏற்பாடு செய்கிறேன்.

அதற்கு உங்களுக்கு விருப்பம் உள்ளதா? என கேட்டறிந்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்.81 மற்றும் 82 ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி தூய்மைப் பணிகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.81க்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட டவுன்ஹால் மற்றும் ராஜவீதி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அறிவித்து, அதை செயல்படுத்தி வருகிறார். அதற்கு பொதுமக்கள், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட டவுன்ஹால் பகுதியில் நடைபாதையில் இருந்த ஆதரவற்ற முதியவரை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., நேரில் சென்று நலம் விசாரித்து முதியோர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்க ஏற்பாடு செய்கிறேன்.
அதற்கு உங்களுக்கு விருப்பம் உள்ளதா? என கேட்டறிந்தார்.