முதல் முறையாக புலி குட்டிக்கு வேட்டையாடும் பயிற்சி: ரூ.75 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட கூண்டு!

தமிழகத்தில் முதல் முறையாக புலி குட்டிக்கு வேட்டையாடும் பயிற்சி அளிக்கும் வகையில் ரூ.75 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பெரிய கூண்டு உருவாக்கிய வனத்துறையினர் அதற்குள் புலியை கொண்டு சென்றுவிட்டனர்.


கோவை: தமிழகத்தில் முதல் முறையாக புலி குட்டிக்கு வேட்டையாடும் பயிற்சி அளிக்கும் வகையில் ரூ.75 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பெரிய கூண்டு உருவாக்கிய வனத்துறையினர் அதற்குள் புலியை கொண்டு சென்றுவிட்டனர்.



கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ம் தேதி இறக்கும் தருவாயில் முடிஷ் என்ற இடத்தில் சுற்றித்திரிந்த 8 மாதம் ஆன ஆண் புலிக்குட்டியை மானாம்பள்ளி வனத்துறையினர் மீட்டு ரொட்டிக் கடை பகுதியில் உள்ள மனித வன விலங்கு மோதல் தடுப்பு மையத்தில் வைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்பு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாலும், வாகன போக்குவரத்து சத்தம் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்து புலிக்குட்டியை மானாம்பள்ளி வனப்பகுதிக்குள் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

சுமார் 6, 8 மாதங்கள் சிகிச்சை அளித்து பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் புலிக்கு தற்போது ஒன்றரை வயது ஆகிறது. புலி கூண்டிற்குள் உணவு அளிக்கப்பட்ட காரணத்தினால் புலியை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட முடியாது என்பதால், புலி வேட்டையாடும் திறன் இல்லாமல் இருப்பதாலும் புலியை வேட்டையாட பயிற்சி அளிக்க வனத்துறையினர் முடிவு செய்து சுமார் 10,000 சதுர அடி பரப்பளவில் கம்பி வேலி அமைத்து தண்ணீர் வசதி, ஓடி விளையாட கூடிய வசதி அமைத்து கொடுத்து சிறிய விலங்குகளை வேட்டையாடும் பயிற்சி அளிக்கப்பட்ட பின்பு புலியை வனப்பகுதிக்குள் விடுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தும் விதமாக ரூ.75 லட்சம் செலவில் வனத்துறையினரால் அமைக்கப்பட்ட பெரிய கூண்டிற்குள் புலியை விட்டனர்.



இந்நிகழ்வில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராம் சுப்பிரமணி, பொள்ளாச்சி இணை இயக்குனர் கணேசன், மானாம்பள்ளி வனச்சரக மணிகண்டன், வால்பாறை வனச்சரக வெங்கடேசன் மற்றும் டாப்ஸ்லிப் வனசரகர் காசிலிங்கம், வனவிலங்கு மருத்துவர் ஸ்ரீதர், மனோகரன் மற்றும் என்ஜிஓ கணேஷ் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...