தனியார் உணவு டெலிவரி ஊழியரை போக்குவரத்து காவலர் தாக்கிய விவகாரம் - பாதிக்கப்பட்டவருக்கு டிஜிபி ஆறுதல்!

தனியார் உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் மீது கிரிமினல் மற்றும் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.


கோவை: தனியார் உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் மீது கிரிமினல் மற்றும் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேடு ஃபன்மால் அருகே பெண் மீது மோதி நிற்காமல் சென்ற தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநரை உணவு டெலிவரி ஊழியர் மோகன சுந்தரம் தட்டிக் கேட்டார். அப்போது அங்கு சிக்னலில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் சதீஷ் உணவு டெலிவரி ஊழியர் மோகன சுந்தரத்தின் கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து போக்குவரத்து காவலர் சதீஷ் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் மோகன சுந்தரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடவடிக்கையை தெரிவித்து அவர் நலம் பெற தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வாழ்த்தியுள்ளார்.



இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது: கோவை பீளமேடு போக்குவரத்து காவலர் சதீஷ், சுகி பணியாளர் மோகன சுந்தரத்தை கன்னத்தில் அறைந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்தப்பட்டது. காவலர் மீது கிரிமினல் மற்றும் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மோகன சுந்தரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடவடிக்கையை தெரிவித்து அவர் நலம் பெற வாழ்த்தினேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...