தனியார் உணவு டெலிவரி ஊழியரை போக்குவரத்து காவலர் தாக்கிய விவகாரம் - பாதிக்கப்பட்டவருக்கு டிஜிபி ஆறுதல்!

தனியார் உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் மீது கிரிமினல் மற்றும் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.


கோவை: தனியார் உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் மீது கிரிமினல் மற்றும் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேடு ஃபன்மால் அருகே பெண் மீது மோதி நிற்காமல் சென்ற தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநரை உணவு டெலிவரி ஊழியர் மோகன சுந்தரம் தட்டிக் கேட்டார். அப்போது அங்கு சிக்னலில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் சதீஷ் உணவு டெலிவரி ஊழியர் மோகன சுந்தரத்தின் கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து போக்குவரத்து காவலர் சதீஷ் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் மோகன சுந்தரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடவடிக்கையை தெரிவித்து அவர் நலம் பெற தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வாழ்த்தியுள்ளார்.



இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது: கோவை பீளமேடு போக்குவரத்து காவலர் சதீஷ், சுகி பணியாளர் மோகன சுந்தரத்தை கன்னத்தில் அறைந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்தப்பட்டது. காவலர் மீது கிரிமினல் மற்றும் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மோகன சுந்தரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடவடிக்கையை தெரிவித்து அவர் நலம் பெற வாழ்த்தினேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...