கோவையில் 113-கோடி மதிப்பிலான சாலை அமைப்பு மற்றும் நகர்ப்புற கட்டிடங்கள் அமைக்கும் பணி-அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைப்பு..!

காளப்பட்டி, உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு, இடையர்பாளையம், லாலி ரோடு, குறிச்சி, சுந்தராபுரம், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் 113-கோடி மதிப்பில் சாலை அமைப்பு, நகர்புற கட்டிடங்கள், அமைக்கும் பணிகளை அமைச்சர் துவக்கி வைக்கிறார்.



கோவை: கோவையில் 113-கோடி மதிப்பிலான சாலை அமைப்பு மற்றும் நகர்ப்புற கட்டிடங்கள் அமைக்கும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைக்கிறார்.

கோவை மாவட்டத்தில், காளப்பட்டி, உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு, இடையர்பாளையம், லாலி ரோடு, குறிச்சி, சுந்தராபுரம், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் 113-கோடி மதிப்பில் சாலை அமைப்பு, நகர்புற கட்டிடங்கள், அமைக்கும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைக்கிறார்.



அதில் ஒரு நிகழ்வாக லாலி ரோடு உழவர் சந்தை அருகில் மருதமலை- வடகோவை சாலையில் சாலை அகலப்படுத்தும் பணியினை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநகராட்சியில் 53 இடங்களில் நகர் நல மையங்களுக்கு கட்டிடம் (தலா 25-லட்சம்) கட்டும் பணிகள், 10-மையங்கள் புரனமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.



இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு எனவும் தெரிவித்தார். மேலும் இன்று 32-கிமீ தொலைவிற்கு சாலை அமைக்கும் பணிகள், பராமரிப்பு பணிகள் அகலப்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், கோவை விமான நிலையம் விரிவாக்கத்தை பொறுத்தவரை 1132-கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 800-கோடி செலவில் நிலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்திற்கு 10-ஆண்டுகளுக்கான வரைவு திட்டங்கள்மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றுவருகிறது என தெரிவித்தார்.



நிதி ஆதாரம் மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை சாலையை விரிவாக்கம் என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கோவை மாவட்டத்தில் முடிக்கப்பட்ட பாலங்கள் விரைவில் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார். தூத்துக்குடி அனல்மின் நிலைய நிலக்கரி விவகாரத்தில் அண்ணாமலை தெரிவித்ததற்கு அன்று மாலையே நான் பதில் அளித்தும் பத்திரிக்கையாளர்கள் ஏன் அவரிடம் கேள்வி கேட்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

நான் கூறும் கருத்துக்களில் ஏதேனும் தவறு இருந்தால் கூட என்னிடம்கேட்கலாம் என தெரிவித்தார். 500, 1000 என சொல்லியும் பத்திரிக்கையாளர்கள் அவரது செய்தியாளர் சந்திப்பிற்குச் செல்கிறீர்கள், உங்கள் மீதே அவதூறு பரப்புகின்றனர்.



அப்போது அனைவரும் அதனை ஏற்றுக் கொள்கிறீர்களா? எனவும் கேள்வி எழுப்பிய அவர், முன்வைக்கக்கூடிய அவதூறுகளுக்கு ஆதாரம் இருந்தால் நாம் பதில் சொல்லலாம் இல்லையெனில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் உடனிருந்தனர்.





Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...